கோவை, ஜூலை 13- தபால்துறை முதன்மை பணிகளுக்கான முதல்தாள் தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று மத்திய தொலை தொடர்புத்துறை அறிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சனையில் தமிழகத் தின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கூறியுள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் விவசாய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழை குறைவாக பெய்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழகத்தின் டெல்டா மாவட் டங்களில் 10 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் 15 ஆயிரம் பண் ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சிறிய ஓடைகளில் கூட தடுப்பணை கட்டி விவசாயத்தை காக்கும் பொருட்டு 2 லட்சம் தடுப்பணைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனையை சமா ளிக்க மழை நீரை சேமிப்பது மிகவும் அவசியம். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளி லும் மழை நீர் சேமிப்பு அவசியம் என்று அறிவித்துள் ளோம். சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தவுள்ளோம். அதேபோல கோவை மாநகராட்சிக்கும் இந்த கட்டமைப்பு விரைவில் கொண்டுவரப்படும். இரு மொழி கொள்கை தான் நம்முடையது என தமி ழக முதல்வரும், துணை முதல்வரும் ஏற்கனவே தெரி வித்துள்ளனர். தமிழ் தான் அனைத்து இடங்களில் வர வேண்டும். தபால்துறை தேர்வு எழுதும் மொழிகள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.