கோவை, பிப். 27 – சட்டமியற்றிய பிறகு போராடு வதில் பயனில்லை என்கிறார் நடி கர் ரஜினி. போராடாமல் எப்படி சட்டத்தை மாற்றுவது. ரஜினியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவ தாலேயே அது பெரிதாகி விடுகிறது என இயக்குநரும், நடிகருமான இரா.பார்த்தீபன் தெரிவித்தார். கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு மற்றும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், திரைப்படத்தின் நூல் களை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தும் விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசி புத்தக கடையில் வியாழனன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநரும், நடிகருமான இரா.பார்த்திபன் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது அவர் கூறுயதா வது, இந்தியன் -2 படத்தில் நடந்த விபத்து தொடர்பான கேள்விக்கு, இருநூறுபேர் இயங்கும் சினிமா படப்பிடிப்பில் பாதுகாப்பு தொடர் பான விசயங்களை பார்த்துக் கொள்ள நிச்சயம் ஒரு தனி மேலா ளர் வேண்டும். இது தொடர்பாக தனி குழு அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதுவேன். சராசரி குடிமகனும், குறிப்பாக மாணவர்கள் அரசியல் மீது ஈடு பாடு காட்ட வேண்டும். சினிமா வில் தன்னிறைவடைந்த பின்னரே அரசியலை பற்றி யோசிக்க வேண் டும். ரஜினி, கமல் அரசியலில் தற்போது போராடி வருகிறார்கள். சினிமாவில் தன்னிறைவு பெற்ற பிறகு நிச்சயம் அரசியலுக்கு வரு வேன் என்றார். இதைத்தொடர்ந்து சிஏஏ தொடர்பான கேள்விக்கு பதிலளிக் கையில், சட்டம் இயற்றிய பிறகு போராடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ரஜினி. சட்டம் இயற்றிய பிறகு அதை மாற்ற முடியுமா என் பது எனக்கு தெரியவில்லை. ஆனால், சட்டத்தை மாற்ற வேண் டும் என்றால், ஏதாவது போராட் டம் நடத்தித்தான் ஆக வேண்டும். வெறுமனே பேசி பேசி வன்முறை யாக்காமல் அதை எவ்வாறு ஆரோக் கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். ரஜினி பாஜகவின் சார்பாக இருந் தாலும், இல்லையென்றாலும், அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தருவதாலே அது பெரியதாகி வருகி றது. அதை ஒதுக்கி வைத்து விட் டால் என்ன?என்று கேள்வி எழுப் பினார். இவ்வளவு போராடும் மக்க ளுக்கு ஏதாவது ஆதரவு அளிக்க வேண்டும் என்று தோன்றுறது, இவ்வாறு அவர் கூறினார்.