உடுமலை, மார்ச் 11- உடுமலையில் அரசு ஊழியர் சங் கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எழுச்சிமிகு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட மையத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி உடுமலை சங்க அலுவலகத் திலிருந்து மெழுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண் டும். உழைக்கும் பெண்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதி யத்தை வழங்க வேண்டும். பெண் கல் விக்கு ஊக்கமளித்திட வேண்டும். பணி செய்யும் இடத்தில் பெண் தொழிலா ளர்களின் குழந்தைகளை பாதுகாக்க காப்பகங்கள் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. இப்பேரணி பல்வேறு முக்கிய பகு திகள் வழியாக சென்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறைவுபெற்று விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மாவட்ட அமைப்பாளர் ராணி, துணைக்குழு உறுப்பினர்கள் ரீட்டா, புஷ்பவள்ளி, அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி யன், மகளிர் துணைக்குழு உறுப்பி னர்கள் ராஜேஷ்வரி, சுமதி, பாரிமளா, பாக்கியம், ஈஸ்வரி மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் வைரமுத்து, திலிப், முருகசாமி, கருப் பன், அம்மாசை உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.