tamilnadu

சிதிலமடைந்த அஞ்சலக குடியிருப்புகள் ஆய்வு

பொள்ளாச்சி,  நவ.4-  பொள்ளாச்சி - உடு மலை சாலையில் பராமரிப் பின்றி சிதிலமடைந்த அஞ்சலக அலுவலர்கள் குடி யிருப்பு கட்டிடங்கள் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. கோவையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி யது. இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பயனற்ற, சிதிலமடைந்த கட்டிடங் களை ஆய்வு செய்து இடிக்க உத்தரவிட்டார். இந்நிலை யில் புதனன்று பொள்ளாச்சி - உடுமலை சாலையிலுள்ள சிதிலமடைந்த பயனற்ற அஞ்சலக அலுவலர்கள் குடியிருப்புகளை இடிப்பது  தொடர்பாக அஞ்சலக அலு வலர்கள் ஆய்வு மேற் கொண்டனர். முதற்கட்ட நடவடிக்கையாக அஞ்சலக குடியிருப்பு கட்டிடங்களி லுள்ள புதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது.   இதுகுறித்து அஞ்சலக அதிகாரி கூறுகையில், முதற்கட்டமாக புதர்களை அகற்றி சுத்தம் செய்த பின் னர், உயர்மட்ட அதிகாரி களை கொண்டு ஆய்வு செய் யப்பட்டு கட்டிடம் இடிப்ப தற்கான பணிகள் மேற் கொள்ளப்படும் என தெரி வித்தனர்.