tamilnadu

img

ஓடக்காட்டில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா

திருப்பூர், ஆக. 19 – திருப்பூர் ஓடக்காட்டில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று மக்கள் ஒற்றுமை விளை யாட்டு விழாவை நடத்தினர். இந்த விழாவில் குழந்தைகள், பெண்கள், இளை ஞர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள் ஓடக்காடு பகத்சிங் திடலில் நடத்தப்பட்டது. சிஐடியு பனியன் சங்க முன்னாள் தலைவர் கே.காமராஜ், வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், பஞ் சாலைத் தொழிலாளர் சங்க முன்னாள் செயலாளர் பி.முருகேசன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் சம்பத், கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். புதுகை பூபாளம் நையாண்டி கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஓடக்காடு பகுதி பொது மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண் டனர்.

தாராபுரம்

தாராபுரம் அடுத்த கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின  விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.கல்பனா  தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியைகள் ஆ.கி.ஜானகிபிரியா, க.சீமாட்டி, நா.பாக்யலட்சுமி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுதந்திரதின விழாவையொட்டி கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி, பாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக் கப்பட்டது. நிறைவில் மாணவர்கள் மற்றும் பெற் றோர்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.