tamilnadu

img

கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்துள்ளது – முக கவசம் இனி கட்டாயம் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை, ஜூன் 7 –  கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்து வருவது மருத்துவ ஆய் வில் தெரிவதால் இனி பொது மக்கள் அலட்சியப்படுத்தாமல் முக கவசத்தை கட்டாயம் அணிவது, தனி மனித இடைவெளியை பின் பற்றுவது உள்ளிட்ட நடைமு றையை தீவிரப்படுத்த உள்ள தாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களி டம் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனியன்று செய்தி யாளர்களை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டலிருந்து தற்போது வரை பொதுமக்கள் ஒத்துழைப்போடு கொரோனா வைரஸ் தடுப்பு நட வடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பேருந்துகள், ரயில் கள் என இயங்கத் துவங்கியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் என்பது கோவை  மாவட்டத்தில் அதிகரித்து வருகி றது. அதேநேரத்தில் மருத்துவத் துறை மற்றும் அரசு வழிகாட்டி யுள்ள முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின் பற்றுவது போன்ற முக்கிய வழி காட்டுதல்களை மக்கள் பின்பற் றுவதில் அலட்சியம் இருந்து வருகிறது. ஆனால், தற்போது கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்துள்ளது என மருத்துவ ஆய்வில் தெரிய வருகிறது. இதை  மக்கள் உணர வேண்டும்.  ஆகவே, பொது வெளியில் வரும் போது முக கவசம் மற்றும் தனி மனித இடை வெளியை பொதுமக்கள் கட்டா யம் கடைபிடிக்க வேண்டும்.  திங்கட்கிழமை முதல் வரு வாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறை இணைத்து கோவையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த இருக்கின்றோம். முகக்கவசம் இன்றி வந்தால் ஒவ் வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், முகக்கவசத்தின் அவசியம் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களுக்கு இரண்டு முக கவசம் வழங்கப்ப டும். தற்போது மாநகரில் மட் டும் ரூ.5 லட்சம் வரையில் அபரா தம் விதிக்கப்பட்டுள்ளது. இது மாவட்டம் முழுவதும் இந்த அப ராத நடவடிக்கையை மேற் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தனிமனித இடை வெளியின்றி இருப்பவர்கள்மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.  இது நிறுவனங்க ளுக்கும் பொருந்தும்  என்றார்.  மேலும், கோவையில் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.  அவர்கள் வெளியில் வந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும். அரசின் அனுமதியின்றி சாலை மார்க்கமாக பல்வேறு பகு தியிலிருந்து மாவட்டத்திற்குள் நுழைந்து விடுகின்றனர்.

இதனை தடுக்க சோதனை சாவடிகளில் இனி கண்காணிப்பு தீவிரப்படுத் தப்படும். அத்தகைய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கோவையில் இதுவரை பல் வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 பேர் சிகிச்சையில் இருக்கின்ற னர். இதில் 3 பேருக்கு சுவாச கருவி கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. பலர் தீவிர கண்காணிப்பில் இருக் கின்றனர்.  கோவை விமான நிலை யத்திற்கு இது வரை 54 விமா னங்கள் வந்துள்ளது. இதில்  43 பேருக்கு கொரோனா இருந்தது தெரியவந்துள்ளது. மீண்டும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின் றோம் என்றார். முன்னதாக இந்த சந்திப்பின் போது கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் ஆகியோர் உடன் இருந்தனர்.