கோவை, அக்.13– டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக குழந் தைகளை விட பெரியவர்கள் அதி களவில் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். காய்ச்சல் பாதிப்புகளை கட் டுப்படுத்த சுகாதாரத்துறை சார் பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பாதிக் கப்பட்டு வருவதாக தெரியவந் துள்ளது. கோவை அரசு மருத்துவ மனைக்கு காய்ச்சல் பாதிப்பினால் சிகிச்சைக்கு வரும் 60 சதவிகிதம் பேர் வட மாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிறன்று நில வரப்படி கோவை அரசு மருத்து வமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள், 30 பெரியவர்கள் என மொத்தம் 36 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், கோவையை சேர்ந்த 18 பேர், திருப்பூரை சேர்ந்த 13 பேர் மற்றும் நீலகிரி, பழனி, பொள்ளாச்சியை சேர்ந்த 5 பேர் என 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர, காய்ச்சல் வார்டில் 128 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதில், 84 பேர் பெரிய வர்கள், 44 பேர் குழந்தைகள் என் பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெங்குவிற்கு சிகிச்சை பெற்று வந்த 14 பேர் ஞாயிறன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனை யில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் செயல்பட கூடிய காய்ச் சல் பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வார்டில் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளனர்.