கோவை, பிப்.25- சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கோவை யில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு சமீபத்தில் சமை யல் எரிவாயுக்கான விலையை உயர்த்தியது. இதனைக் கண்டித்து கோவை காட்டூர் பகுதியில் உள்ள ஜனநாயக மாதர் சங்க அலுவல கம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித் தும், பட்டை நாமமிட்டும் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமை வகித்தார். இதில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி னர். இப்போராட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எ.ராதிகா, மாநிலக்குழு உறுப்பி னர்கள் ராஜலட்சுமி,சுதா உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.
முன்னதாக செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த உ.வாசுகி கூறுகையில், அனைத்து மக்களும் உபயோகிக்கும் சமையல் எரிவாயு விலை, மாதா மாதம் உயர்த்தப்படு கிறது. கடந்த வருடம் ரூ.736 ஆக இருந்த விலை தற்போது ரூ.950 வரையில் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு கடைபிடிக்கும் கொள்கை தான் காரணம். பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கிய பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுத்து எரிவாயு சிலிண்டரை வாங்க கூடிய நிலையில் எத் தனை குடும்பங்களில் உள்ளது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகை வாரி வழங்கும் மத்திய அரசு, வங்கிகளில் வாங்கிய கடன் களை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடி விடுவதை பற்றி கவலைப்படாத மத்திய அரசு, சிக்கனம் என்ற பெயரில் மானியத்தை குறைப்பது ஏற்க முடியாது என்றார். மேலும், மத்திய அரசு பட்ஜெட் டில் முக்கிய துறைகளுக்கு நிதி களை குறைத்தும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், கல்வி, மருத்துவம், சமூக நல திட்டங்க ளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப் பட்டுள்ளது. மேலும் விவசாயி கள் தற்கொலையை தொடர்ந்து தற்போது வேலை இல்லாத வர் தற்கொலை அதிகமாக நடப்ப தாக அவர் தெரிவித்தார். மேலும், ஜிஎஸ்டி பண மதிப்பிழப்பு காரண மாக தொழில்கள் நலிந்து உள்ள தாக தெரிவித்த அவர், தற்போ தைய மத்திய, மாநில பட்ஜெட்க ளால் எந்த வித பயனும் இல்லை என்று விமர்சித்தார். ஆகவே, இத்தகைய மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரா கவும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதாக கூறினார்.