tamilnadu

img

திருப்பூரில் நண்பர்கள் சேவை சங்கம் தொடக்கம்

திருப்பூர், ஆக. 19 – திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் நண் பர்கள் சேவை சங்கம் என்ற புதிய அமைப்பு ஞாயி றன்று தொடங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு எம்எல்ஏ  கே.என்.விஜயகுமார் இந்த சங்கத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கருப்பராயன் கோயில் கமிட்டிச் செயலாளர் பி.ராமசாமி தலைமை வகித்தார். இதில் நண்பர்கள் சேவை சங்கத் தலைவர் ஏ.பி.ராஜேந்திரன் கொடியேற்றி வரவேற்றார். இவ்விழாவில் மருத்துவர் எஸ்.மரகதம் சந்திரசேகர் அவர்களின் மருத்துவ சேவையைப் பாராட்டி சிறப்புச் செய்தனர். கவிஞர் கவிதாசன் பங்கேற்று சொற்பொழிவாற்றினார்.  மகாத்மா காந்தியடிகள் படத்தை துணைத் தலை வர் என்.ஆறுமுகம், காமராஜர் படத்தை துணைத் தலைவர் எம்.அப்புக்குட்டி, திருவள்ளுவர் படத்தை கோவில் கமிட்டித் தலைவர் வி.பழனிசாமி, திருப்பூர் குமரன் படத்தை  துணைத் தலைவர் ஆர்.தேவராஜ், பாரதியார் படத்தை துணைத் தலைவர் பி.சுப்பிரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் ஊர்ப் பொது மக்கள் திரளா னோர் கலந்து கொண்டனர். முன்னதாக அ.புதூர் நடுநிலைப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கச் செயலாளர் எஸ்.சேகர், பொரு ளாளர் வி.சீனிவாசன், நிர்வாகக்குழு உறுப்பி னர் ஏ.உமாநாத் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத் தனர். துணைச் செயலாளர் கே.கே.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.