பாப்பாரப்பட்டி, செப்.6- பாப்பாரப்பட்டியில் வேளாண் கல்லூரி துவங்க வேண்டுமென தமிழ்நாடு விவ சாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதிக் குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பகுதி குழுவின் தலைவர் டி.ஆர்.சின்ன சாமி தலைமை வகித்தார். பகுதி குழு செயலாளர் ஆர்.ஆர்.சக்திவேல் அறிக் கையை முன்வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் சோலை அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கட்சி பாப்பாரப் பட்டி குழு செயலாளர் ஆர்.சின்னசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் தர்மபுரி மண்டலத் துணை தலைவர் வே.மனோன்மணி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம், விதொச செயலாளர் ராஜமாணிக்கம், மாதர் சங்க செயலாளர் ராஜாமணி, வாலிபர் சங்க செயலாளர் லோகநாதன், தலைவர் சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த பேரவைக் கூட்டத்தில், பாப்பாரப் பட்டியில் வேளாண் கல்லூரி துவங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பாப்பாரப் பட்டி பேரூராட்சி தினசரி மற்றும் வாரச் சந்தைகளில் கடுமையான கட்டண சுமையை குறைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பாரப் பட்டியில் உள்ள குளங்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும். ஒகேனக்கல் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் மாத வாடகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
இப்பேரவையில் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஆர்.சின்னசாமி, துணைத் தலைவராக பி.வேலு, செயலாளராக சக்திவேல், துணை செயலாளராக எஸ். சண்முகம், பொருளாளராக கே.காம ராஜ் உள்ளிட்ட 13 பேர் கொண்ட புதிய பகுதி குழுத் தேர்வு செய்யப்பட்டது. நிறை வாக பகுதி குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.