சேலம், ஜுலை 14- சேலம் மாவட்டத்தின் கடைக் கோடி கிராமமான கிழக்கு இராஜ பாளையத்தில் நிலத்தடி உப்பு நீரை அருந்தியதால் இதுவரை 40 உயிர்கள் பலியான பகுதியில் சிபிஎம் மாவட்ட குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர். சேலம் மாவட்டத்தில் கடைசி எல்லை பகுதி கெங்கவல்லி தாலுகாவில் உள்ளது கிழக்கு ராஜ பாளையம் கிராமம். இக்கிராமத் தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி, போயர் தெரு பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் உப்பு அதிகமாக உள்ள நிலத்தடி நீரையே பயன் படுத்தி வந்தனர். உப்பு நீரினைக் குடித்து வந்த மக்களில் இது வரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஏ.முருகேசன், கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதி குமார், பகுதி கிளை செய லாளர் ஜோதிவேல் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட மக்களை சந்தித்து பேசினர். இந்த கிராமத்தில் ஒரு கிண றும், இரண்டு ஆழ்துளை கிணறு களும் உள்ளன. இதில் கிடைக்கக் கூடிய நீரை தான் இப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றோம். இந்நீரில் உப் பின் அளவு சுமார் எட்டு பாயின்ட் அதிகமாக இருப்பதாகக் கூறப் படுகிறது. வேறு வழியின்றி இந்த உப்பு நீரை குடித்து வந்த தால் கடந்த மூன்று ஆண்டுக ளில் மட்டும் 40 பேர் உயிரிழந் துள்ளனர். மேலும், 24 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். இதில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் டயாலிசிஸ் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் ரத்தப்பரிசோதனை செய்து கொண்டே இருக்கின்றனர் என தங்களது வேதனையைத் தெரி வித்தனர். இக்கிராமத்தில் வசதி வாய்ப் புகள் உள்ளவர்கள் தண்ணீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். வசதி இல்லாதவர்கள் உப்பு நீரை மட்டுமே பயன்படுத்தி வரும் அவல நிலையும் உள்ளது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் குடிநீர் விநியோகிக் கப்பட்டது. அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோபாலபுரம் வரை மேட்டூரிலிருந்து காவிரி நீர் வருகிறது. அங்கிருந்து இணைப்பு கொடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும். இதற் காக கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வர் தனிப் பிரிவிலும், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம், குடிநீர் வாரியத்திற்கும் மனு கொடுத்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினரிடமும், பாராளுமன்ற உறுப்பினரிடமும் முறையிட் டுள்ளனர். கிராம சபை கூட்டத் திலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, பக்கத்து மாவட்ட மான பெரம்பலூர் மாவட்டத்தில் நெற்குடம், வேப்பம் தட்டை ஆகிய பகுதிகளில் அரசு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கியுள்ளதைப்போல், இப்பகுதிக்கும் தண்ணீர் சுத்தி கரிப்பு இயந்திரம் வைத்து தண் ணீரை சுத்தம் செய்து வழங்கிட வேண்டும். மேலும், இந்த மாவட் டத்தில் மேட்டூர் காவிரி நீர் இருந் தும் இந்த மாவட்டத்தில் ஒரு பகுதி மக்கள் குடிதண்ணீர் இல் லாமல் உயிர் இழப்பது என்பது கொடுமையானது. இவ்வளவு நடந்தும் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதை கண் டித்து இப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தெரிவித்தார்.சேலம், ஜுலை 14- சேலம் மாவட்டத்தின் கடைக் கோடி கிராமமான கிழக்கு இராஜ பாளையத்தில் நிலத்தடி உப்பு நீரை அருந்தியதால் இதுவரை 40 உயிர்கள் பலியான பகுதியில் சிபிஎம் மாவட்ட குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர். சேலம் மாவட்டத்தில் கடைசி எல்லை பகுதி கெங்கவல்லி தாலுகாவில் உள்ளது கிழக்கு ராஜ பாளையம் கிராமம். இக்கிராமத் தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி, போயர் தெரு பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் உப்பு அதிகமாக உள்ள நிலத்தடி நீரையே பயன் படுத்தி வந்தனர். உப்பு நீரினைக் குடித்து வந்த மக்களில் இது வரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஏ.முருகேசன், கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதி குமார், பகுதி கிளை செய லாளர் ஜோதிவேல் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட மக்களை சந்தித்து பேசினர். இந்த கிராமத்தில் ஒரு கிண றும், இரண்டு ஆழ்துளை கிணறு களும் உள்ளன. இதில் கிடைக்கக் கூடிய நீரை தான் இப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றோம். இந்நீரில் உப் பின் அளவு சுமார் எட்டு பாயின்ட் அதிகமாக இருப்பதாகக் கூறப் படுகிறது. வேறு வழியின்றி இந்த உப்பு நீரை குடித்து வந்த தால் கடந்த மூன்று ஆண்டுக ளில் மட்டும் 40 பேர் உயிரிழந் துள்ளனர். மேலும், 24 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். இதில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் டயாலிசிஸ் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் ரத்தப்பரிசோதனை செய்து கொண்டே இருக்கின்றனர் என தங்களது வேதனையைத் தெரி வித்தனர். இக்கிராமத்தில் வசதி வாய்ப் புகள் உள்ளவர்கள் தண்ணீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். வசதி இல்லாதவர்கள் உப்பு நீரை மட்டுமே பயன்படுத்தி வரும் அவல நிலையும் உள்ளது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் குடிநீர் விநியோகிக் கப்பட்டது. அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோபாலபுரம் வரை மேட்டூரிலிருந்து காவிரி நீர் வருகிறது.
அங்கிருந்து இணைப்பு கொடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும். இதற் காக கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வர் தனிப் பிரிவிலும், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம், குடிநீர் வாரியத்திற்கும் மனு கொடுத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினரிடமும், பாராளுமன்ற உறுப்பினரிடமும் முறையிட் டுள்ளனர். கிராம சபை கூட்டத் திலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, பக்கத்து மாவட்ட மான பெரம்பலூர் மாவட்டத்தில் நெற்குடம், வேப்பம் தட்டை ஆகிய பகுதிகளில் அரசு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கியுள்ளதைப்போல், இப்பகுதிக்கும் தண்ணீர் சுத்தி கரிப்பு இயந்திரம் வைத்து தண் ணீரை சுத்தம் செய்து வழங்கிட வேண்டும். மேலும், இந்த மாவட் டத்தில் மேட்டூர் காவிரி நீர் இருந் தும் இந்த மாவட்டத்தில் ஒரு பகுதி மக்கள் குடிதண்ணீர் இல் லாமல் உயிர் இழப்பது என்பது கொடுமையானது. இவ்வளவு நடந்தும் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதை கண் டித்து இப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தெரிவித்தார்.