கோவையில் அதிகாலையில் நிலவும் பனிப்பொழிவு
கோவை, டிச. 11 – கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்க ளாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் குளிரால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நவம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாதம் முழுவதும் பனிப்பொழிவு காணப்படும். குறிப்பாக, தமிழ் மாதம் கணக்கின்படி, மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும். தை, மாசி மாதத்திலும் பனி நீடிக்கும். கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் சில நாட்களாக மழை இல்லாததால் கடந்த 2 நாட்களாக அதிகாலை நேரத்தில் அதிகள வில் பனிப்பொழிவு உள்ளது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. பனிப்பொழிவு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக வயதானவர்கள் மூச்சு திணறல் உள் ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பனியின் காரணமாக அதிகாலை நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர். இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு இருந்தால் மழை குறை யும் வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண் பல்கலைக்கழக கால நிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில், “மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு காணப்படுகிறது. இது தொடருமா? என்பதை அடுத்த 2 நாட்கள் கண்காணித்துதான் கூற முடியும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேர வெப்ப நிலை 24 டிகிரி வரை இருந்தது. இது தற்போது, குறைந்து 20.5 டிகிரி என்ற அளவில் இருக்கிறது. பருவமழை இன்னும் 20 நாட்கள் இருக்கிறது. பனி நீடித்தால் மழை குறையும் வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரி, டிச.11- காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாரண்டஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் நடைபெற்றது. மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு உட் பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மகளிர் பள்ளி களில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்ப டுத்தும் வகையிலும் பள்ளி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாரண்டஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி உதவி காவல் ஆய்வா ளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாண விகளிடையே இந்த செயலியை பயன்படுத்தும் முறை மற்றும் பல சமூக விரோதிகள் இடமிருந்து மாணவி கள் தங்களை எப்படி காப்பாற்றிக்கொள்வது மற்றும் பெண்கள், முதியோர்கள் பாதிக்கப்படும் தருவாயில் எப்படி அவர்களை காப்பாற்றுவது என்பது குறித்து விளக்கப்பட்டது. இதில் மாரண்டஅள்ளி காவல் துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரி யர் கோவிந்தம்மாள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.