அஞ்சல் குறைதீர் முகாம்
தருமபுரி, செப்.15- தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பா ளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, தருமபுரியில் கோட்ட அளவிலான அஞ்சல் துறை குறைதீர் கூட்டம் செப்.24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், நுகர்வோர் தங்கள் அஞ்சல் துறை சார்ந்த குறைகளை நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், நுகர்வோர் தங்கள் மனு சார்ந்த அனைத்து விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு, கடிதத்தின் மேல் தருமபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறை தீர் கூட்டம் என்று குறிப்பிட்டு வருகிற செப். 20-ஆம் தேதிக்குள் தரு மபுரி கோட்ட அஞ்சல் கண் காணிப்பாளர் அலுவல கத்திற்கு அனுப்பி வைக்கு மாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.
மனநலம் பாதித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது
கோவை, செப்.16- கோவை மதுக்கரை சாலையில் உள்ள பிள்ளை யார்புரம் பகுதியை சேர்ந்த வர் முரளி (26). இவர் ஞாயி றன்று அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிகு கப்பட்ட பெண்ணிற்கு பாலி யல் தொல்லை கொடுத் துள்ளார். அப்போது வீட் டிற்கு வந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சியடைந்து, முரளியிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வரும் கண்ணன் என்ப வர் முரளியை பிடிக்க முற் பட்டுள்ளார். அப்போது, முரளி தன்னிடமிருந்த கூர்மையான ஆயுதத்தால் கண்ணனை தாக்கி தப்பியோடினார். இதையடுத்து அப்பகுதி மக்கள், முரளியை துரத்தி பிடித்து போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர்.