கோவை, ஜூன் 15– மத்திய மோடி அரசு இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வு போன்ற வற்றை திணித்து வருகிறது. இது மாநில உரிமை மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என குற்றம் சாட்டி மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சனி யன்று பல்வேறு இடங்களில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. கோவையில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்தாநதன் தலைமை விகத்தார். ஆர்ப்பாட்டத்தில் காங் கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் வி.எம்.சி.மனோக ரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோ கன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சுசி.கலைய ரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சாஜித், திரா விடர் தமிழர் கட்சியின் வெண் மணி மற்றும் ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் நிர் வாகிகள் பங்கேற்றனர். முன்ன தாக ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மனு திணிப்பு நடவடிக் கையைக் கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதில் இவ்வமைப்பின் நிர்வாகிகள் சிற்றரசு, சந்திரசேகர், வேலுச் சாமி, கலைச்செல்வி, க.வீரமணி மற்றும் தேவிகா உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
இதேபோல் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் தொடங்கி வைத்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலை வர் ஈ.பி.ரவி, பாட்ஷா, மதிமுக மாவட்ட செயலாளர் முருகன், திமுக கோட்டை பகுதி செயலா ளர் ராமசந்திரன், பெரிய சேமூர் செல்வராஜ் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் சிந்தனை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குன்னூர்
குன்னூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மருத்துவர் அணி தலைவர் மரு.கௌதம் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் ராமசாமி, முபாரக், ஜாகீர் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் ஜே.ஆல் தொரை, ரபீக், அப்துல் ரஹ்மான், மதிமுக நகர செயலாளர் கிங்ஸ் ராஜன், திக ராஜேந்திரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.