மேட்டுப்பாளையம், ஆக.18- கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய் யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட் டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறி விக்கப்பட்டுள்ள இந்த பழமை யான மலைரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாடு முழுவதி லும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்ற நிலையில் கல்லார் – அடர்லி ரயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு பாதை மூடிக்கிடப்பது குறித்து தெரிய வந்தது. இதனை யடுத்து மலைரயில் கல்லாறை அடுத்துள்ள மலைப்பாதையில் நிறுத்தப்பட்டது. மண்சரிவின் போது மேலிருந்து பாறைகள் உருண்டு விழுந்து மலைரயில் செல்லும் இருப்பு பாதை சேத மானதால் மேற்கொண்டு பய ணிக்க இயலாத சூழலில் உத கைக்கு புறப்பட்ட மலைரயில் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் பேருந்துகள் மற்றும் கார் மூலம் உதகைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதிக நேரம் ஆகிவிட்டதால் சிலர் மீண்டும் உதகைக்கு செல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்றனர். கனமழை யால் ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக மலைரயில் பயணம் பாதியில் முடிவடைந்ததால் இதில் பயணித்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கும் அவ திக்கும் ஆளாகினர். தற்போது மண்சரிவு பகுதி யில் முப்பதுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். தொடர்ந்து மழை இல் லாமல் சீரமைப்பு பணிகள் மாலைக்குள் நிறைவடைந்தால் மட்டுமே வழக்கம் போல் மலை ரயில் இயக்கப்படும் என கூறப் படுகிறது.