tamilnadu

img

அவிநாசியில் கனமழை 200 ஆண்டு பழமையான மரம் சாய்ந்தது

அவிநாசி, ஆக்.30- அவிநாசியில்  செவ்வாய் கிழமை பெய்த மழையால் சுமார் 200 ஆண்டு பழமை யான இச்சி மரம் வேருடன் சாய்ந்தது. திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் செவ்வா யன்று மாலை துவங்கி விடிய விடிய கனமழை  பெய்தது. இதில் அதிக பட்சமாக அவிநாசியில் 49 மி.மீ., மழை பதிவாகி யுள்ளது. இந்த மழையால் சாலையெங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந் நிலையில், அவிநாசி மங்கலம் ரோடு, ராயர்  கோவில் முன்பு  இருந்த 200 ஆண்டு பழமை யான இச்சி மரம் மழையின் காரணமாக வேருடன் சாய்ந்தது. இதேபோல், கை காட்டிபுதுாரில் உள்ள அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரங்களில் ஒன்றும் சாய்ந்தது.