tamilnadu

வால்பாறையில் கன மழை

வால்பாறை, ஏப்.21-வால்பாறையில் இடியுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை உள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் சனியன்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர்வரத்துஅதிகரிக்கத் துவங்கியுள்ளது.

;