சேலம், செப்.27- இளம்பிள்ளை பகுதியில் சாலையில் வழிந் தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயானது மிக குறுகியதாக அமைக்கப் பட்டுள்ளது. இச்சூழலில் இந்த சாக்கடை கால் வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கழிவுநீர் தேங்கி சாலையேங்கும் வழிந் தோடியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியதோடு, பெரும் சுகாதார சீர் கேட்டையும் உண்டாக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்றத் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி பணியாளர்கள் அப் பகுதிக்கு வந்து சாக்கடையில் அடைக்கப்பட்டிருந்த குப்பை மற்றும் கழிவுப் பொருள்களை அகற்றினர். இருப்பினும், மழை காலம் துவங்கியுள்ள நிலையில் குறுகிய சாக்கடை கால்வாய் காரணமாக மீண்டும் சாலை மற்றும் குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகும் நிலை அபாயம் உள்ளது. ஆகவே, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.