அவிநாசி, நவ. 27 அவிநாசி அருகே புதுப்பாளையம் கிராம பகுதிகளில் புதனன்று சுகாதார விழிப்புணர்வு பேரணி, மற்றும் சுகா தாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி ஒன்றியம் சுகாதாரப்பிரிவினர் , புதுப்பாளை யம், வஞ்சிப்பாளையம் கிராமபகுதிகளில் சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.இதன் துவக்கத்தில், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.இதனைய டுத்து, அனைத்து வீடு மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி, கொசு மருந்து அடிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு, நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அங்குள்ள கட்டடங்களின் மேற்கூரை யில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் சாலையேரத்தில் குவிந் திருந்த குப்பைகள், கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த சுகாதாரப் பணிகள் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மேற்பார்வை யில்,மருத்துவர்கள் விக்னேஷ், ஜெயலட்சுமி, சந்திரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.அவிநாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், வீடுகள் தோறும் ஆய்வு செய்து, கொசு உற்பத்தி செய்யும் வகையிலான வீடுகளின் உரிமை யாளர்களை எச்சரித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், ரமேஷ், பரமன், கோவிந்தராஜ் ஆகியோர் செய்தனர்.