tamilnadu

img

சீன அதிபரை கவர்ந்த சிறுமுகை பட்டுக்கு பெருகும் வரவேற்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தமிழக வருகை ஒரு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால் மத்திய அரசும், மாநில அரசும் பல சுவார சியமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தி ருந்தன. கண்கவர் கலை நிகழ்சிகளுடன் அரசு சார்பில் சீன அதிபருக்கு பரிசுக ளும் வழங்கப்பட்டன. குறிப்பாக, பிர சித்தி பெற்ற நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் சரஸ்வதி ஓவியம்  பரிசளிக்கப்பட்டதோடு, கோவை  மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள  சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்க ளால் நெய்யப்பட்ட சால்வைகளும் பரி சளிக்கப்பட்டது. சிறுமுகை ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தயாரிக்கப்பட்டு, சீன நாட்டு கொடியினை நினைவுப்படுத்தும் இந்த சிவப்பு நிற சால்வைகள், கிளாசிக் பட்டு நூல்களை  பயன்படுத்தி சீன அதிபர் புன்சிரிப்புடன் இருப்பது தத்ரூபமாக நெய்யப்பட்டிருந் தது தான் ஹைலைட். கைத்தறி நெசவா ளர்களின் இந்த கைவண்ணம் உலகிற்கு பட்டை அறிமுகப்படுத்திய சீனத்து அதிபரையே வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. சீனத்திற்கு பயணம் செய்யும் இந்த சிறுமுகை சால்வை முன்பு நின்று சீன அதிபரும், இந்திய பிரதமரும் புகைப்படம் எடுத்துக்கொண்டது அதன் சிறப்பை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்தது. இத னால், ஒரே நாளில் உலகம் முழுவதும் புகழ் வட்டத்திற்குள் சிறுமுகை பட்டு ரகங்கள் வந்துள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் கைத்தறி தொழி லையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள னர். கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற  இங்கு தயாராகும் மென்பட்டு சேலை ரகங் கள் இதன் தரம் மற்றும் வேலைப்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் வர்த்தகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளது. சிறுமுகை யில் தயாராகும் கைத்தறி மென்பட்டு, கோரா காட்டன் மற்றும் காட்டன் சேலை கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டு மல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக் காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பட்டு சேலைகளில் போடப்படும் மிக சிறந்த கலைநயம்மிக்க டிசைன்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதினை ஐந்து முறையும் ஒரு லட்சத்து அறுபத்தி நான்காயிரம் வண்ணங்களில் நெய்யப்பட்ட பட்டு சேலைக்கு மாநில அரசு  விருதினையும் சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்கள் வென்றுள்ளனர் என்பதே  இவர்களின் தனிச்சிறப்பிற்கு சான்று.  திரு வள்ளுவரையும் அவர் படைத்த 1,330 திருக்குறளையும் பட்டு சேலையில் நெய் தது உள்பட பல ஆச்சரிய படைப்புகளுக்கு சொந்தக்காரர்கள் இப்பகுதி கைத்தறி நெசவாளர்கள். 

காஞ்சிபுரம், மதுரை, ஆரணியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள்  எடை மற்றும் விலை அதிகமாக இருக்கும். இப்பட்டு சேலைகளை வசதி படைத்தவர் கள் மட்டுமே வாங்க முடியும் என்பதோடு இதனை கட்டுவதும் வீட்டில் வைத்து பராமரிப்பதும் கடினம். இந்நிலையில் சிறுமுகை பகுதியில் முதன்முதலில் கைத்த றியில் சாப்ட் சில்க் எனப்படும் மென் பட்டு சேலைகள் நெய்யப்பட்டு அறிமுகப் படுத்தபட்டது. மிக மெல்லிய தரமான பட்டு நூலை பயன்படுத்தி வியக்கத்தக்க டிசைன்களோடு முற்றிலும் மனித உழைப் பினால் வெகு நுணுக்கமாக நெய்யப்பட்ட இந்த பட்டு ரகங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் விலையும் குறைவு, பராமரிப்ப தும் சுலபம் என்பதால் ஆண்டு தோறும் இதன் விற்பனையும் அதிகரித்து வருகின் றது. குறிப்பாக இன்றைய இளம் பெண் கள் மென்பட்டு சேலைகளையே விரும்பி வாங்குகின்றனர். மேலும் திருமண பட்டுப் புடவைகளில் நுகர்வோர் விரும்பினால் கணினியில் டிசைன் செய்து மணமகன் மற்றும் மணமகளின் உருவங்களை தத் ரூபமாக நெய்தும் தருகின்றனர். 

சிறுமுகையில் உள்ள 17 கைத்தறி நெசவு கூட்டுறவு உற்பத்தி சங்கங்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டி கைக்கு ரூ.60 கோடிக்கும் மேல்மென்பட்டு சேலை ரகங்கள் வர்த்தகம் ஆகியுள்ள நிலையில், சீன அதிபருக்கு பட்டு சால்வை  வழங்கியதன் மூலம் கிடைத்த வரவேற்பு காரணமாக இவ்வாண்டு இதனை நூறு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உற்பத்தியும் விற்பனையும் தீவிர மாகியுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு கைத்தறி கூட்டுறவு சங்கமும் ஐந்து முதல்  எட்டு கோடி ரூபாய்க்கு வர்த்தக இலக்கு நிர்ணயித்துள்ளதால் இவ்வாண்டு தீபா வளி பண்டிகை விற்பனை கண்டிப் பாக நூறு கோடியை எட்டும் எனவும் சீன அதிபரின் வருகைக்கு பின்னர் வடமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் கைத்தறி கூட்டுறவு  சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இரா.சரவணபாபு