tamilnadu

img

குரூப்-2 தேர்வு: விரைவில் கலந்தாய்வு

சென்னை,டிச.2- தமிழ்நாடு அரசுத் தேர்வாணை யம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 தேர் வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறி விக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறை களில்  காலியாக உள்ள 1,338 பணி யிடங்களுக்கான அறிவிப்பு கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியா கிய நிலையில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வை 6 லட்சத்து 26 ஆயி ரத்து 970 பேர் எழுதினர். 

அதில் வெற்றிப்பெற்றவர்க ளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த  பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதையடுத்து  நவம்பர்  மாதம் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில்  2 2667 பேர் பங்கேற்றனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறி விக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரி வித்துள்ளார்.