கோவை, ஆக. 8- மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தினால் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கோவை கரிச் சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மூடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கரிச்சிப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் கரிச்சிப்பாளையம், காடுவெட்டிபாளையம், பில்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவ, மாண விகள் படித்து வந்தனர். இப்பள்ளியில் இரண்டு வகுப் பறைகள், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. சிறப்பாக செயல்பட்டு வந்த இப் பள்ளியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து இரண்டு மாணவிகள் மட்டுமே படித்து வந்தனர். ஒரு ஆசிரியர் மட்டும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தற்போது ஒரே மாணவி மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டது.
நடப்பாண்டில் ஒரு மாணவர் கூட பள்ளியில் சேரவில்லை. இதனால், ஏற்கனவே படித்து வந்த மாணவியை ஒன்னிப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் வேறு பள்ளிக்கு பணி யிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தினால் கரிச் சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தற்போது மூடப்பட் டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஏற்கனவே வால்பாறையில் உள்ள பெரிய கல்லாறு பள்ளி மூடப்பட்ட நிலையில், தற் போது மற்றொரு பள்ளியும் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட பள்ளியை நூலகமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கீதா கூறுகை யில், கரிச்சிப்பாளையம் சிறிய ஊர். இப்பகுதியில் மாண வர்கள் இல்லை. சிலர் அருகேயுள்ள பள்ளியில் சேர்ந்துள் ளனர். இதனால், பள்ளியில் நடப்பாண்டில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதனால், பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவி மற்றும் ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர் என்றனர்.