tamilnadu

img

அரசு ஊழியர் சங்க தலைவர் எம்.வெற்றிவேல் மறைவு - அஞ்சலி

தருமபுரி, ஆக.13- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி முன்னாள் மாவட்ட செய லாளரும், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் எம்.வெற்றிவேல் (ஆக.12) திங்களன்று கால மானார். அன்னாரது உடலுக்கு செவ்வாயன்று அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தரு மபுரி மாவட்டச் செயலாளராகவும், மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் தோழர் எம்.வெற்றிவேல். தருமபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். பணி ஓய்வுக்கு பிறகு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், உடல் நிலை குன்றியதால் சிகிச்சை பெற்று வந்த அவர் (ஆக.12) திங்க ளன்று காலமானார்.  அன்னாரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி, பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சிவப்பிரகாசம், மாநிலப் பொருளாளர் நடராஜன், முன்னாள்  பொதுச் செயலாளர் சி.பி.ஜெயராமன், மாவட்டத் தலைவர் முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட மகளிர் அணி துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில், வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எம்.யோகராசு, மாவட்டத் தலைவர் ஜெயவேல், கூட்டு றவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.பழனியம்மாள், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.காவேரி, பி.எஸ்என்எல்இயூ மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பெரு மாள், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, சுந்தரராஜன், கேசவன், திரு வேங்கடம், துரை, இராமனுஜம், அரசு  ஊழியர் சங்க முன்னாள்  மாநில துணைத் தலைவர் ரவி உள்ளிட்டோர் மலர் வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினர்.  மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸா மேரி, வே.விசுவநாதன், இடைகமிட்டி செய லாளர்கள் ஜோதிபாசு, கந்தசாமி, வஞ்சி,  சக்திவேல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் தோழர் வெற்றிவேல் குடும்பத்துக்கு ஆறு தல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் செவ்வாயன்று தருமபுரியில் நல்ல டக்கம் செய்யப்பட்டது.