tamilnadu

img

அரசு மருத்துவர்கள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை, ஆக.27-  கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முது நிலை மருத்துவ மாணவர்கள் செவ்வாயன்று ஒருநாள் அடை யாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு,  மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில, கோவை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவர்கள், அரசு பட்ட மேற்படிப்பு மாணவர்க ளுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய் வின்றி நேரடியாக பணி நியமனம் செய்யக்கூடாது. தகு திக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை அரசாணையில் தெரிவித்தவாறு நிரப்ப வேண்டும்.  பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள் 130 பேர் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப் பதில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், பயிற்சி மருத்துவர் கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.