தாராபுரம், ஜூன் 28- தாராபுரம் பகுதியில் நாய்க் கடிக்கு தொடர்ந்து ஆடுகள் பலி யாவதை தடுக்கக்கோரி கொதித் தெழுந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் அடுத்த கள்ளிப் பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜு. இவர் சொந்தமாக 30 ஆடு களை வளர்த்து வருகிறார். புத னன்று இரவு வழக்கம்போல் ஆடு களை மேய்த்துவிட்டு பட்டியில் அடைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது நாய் கடித்து 30 ஆடுகள் இறந்துகிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜு கால் நடைத்துறையினருக்கு தகவல் அளித்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளிப்பாளை யம், கொழுமங்குளி, சங்கரண்டாம் பாளையம், சிறுகிணறு, சூரியநல் லூர், நஞ்சியம்பாளையத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடினார்கள். இந்த விவசாயிகள் நாய்க்கடிக்கு ஆடுகள் பலியாவது குறித்து துணை ஆட்சியர், நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் கள்ளிப்பாளையத்தில் 30 ஆடுகள் இறந்ததற்கு காரண மான 6 நாய்களை அடித்து கொன்ற னர். தொடர்ந்து நகராட்சிக் குப்பை மேட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 6 நாய்களையும் அடித்து கொன்ற னர். தொடர்ந்து அரசு நிர்வாகம் உடனடியாக நாய்களை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி ஈரோடு- திருப்பூர் பிரிவு சாலை யில் பலியான ஆடுகளுடன் குண்டடம் ஒன்றிய முன்னாள் துணை தலைவர் சோமு தலை மையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் சாலையின் இருபுற மும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து தாரா புரம் டிஎஸ்பி வேலுமணி, ஆய் வாளர் (பொறுப்பு) சுரேஷ், மண்டல வட்டாட்சியர் புவனேஸ்வரி ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். நாய்களை கட்டுப்படுத்த உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண் டும். பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என உறுதியளித்தால் மட்டுமே மறியலை விலக்கி கொள்வோம் எனக்கூறினர். இதையடுத்து தாராபுரம் நகராட்சி நகர்நல அலு வலர் லட்சுமி நாராயணன், டிஎஸ்பி வேலுமணி ஆகியோர் மீண்டும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நகர் நல அலுவலர் ஒருவாரத்திற்குள் நாய் களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்து துணை ஆட்சியர் அலுவல கத்தில் பேச்சுவார்த்தை நடத்து வது என விவசாயிகளிடம் உறுதி யளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்ற னர். மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.