tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறுக

நாமக்கல், அக்.1 -  மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பள்ளிபாளையம் ஒன்றியக்குழு சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளி பாளையம் தெற்கு ஒன்றிய செய லாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி னார். இதில் வாகனங்கள் பதிவு, புதுப் பித்தல், தகுதிச்சான்று, காப்பீடு ஆகியவைக்கு பத்து மடங்கும் அதிக மாக கட்டணங்கள் உயர்த்தப்பட் டுள்ளதை திரும்பப்பெற வேண்டும். சிறிய குற்றங்களையும் கிரிமினல் குற்றங்களாக மாற்றி ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கவும் இச் சட்டம்   வழிவகை செய்துள்ளது. இதனால் மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடுபவர்களும், வாகன  ஓட்டுனர்களும் கடுமையாக பாதிக் கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே  மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். இச்சட்டம் ஏழை, எளிய மக்களை  கடுமையாக பாதிக்கின்ற காரணத் தால் கேரளாவில் அமல்படுத்தப் படவில்லை. அதேபோன்று தமிழ கத்திலும அமல்படுத்தக் கூடாது என  வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.மோகன், இ.கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், காசிவிஸ்வநாதன், சக்திவேல், சம்பூ ரணம், முத்துக்குமார், சரவணன், பிரபாகரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.