சாலை போக்குவரத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை, அக்.15– பொதுப்போக்குவரத்தை சீர்குலைக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப்பெற வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று சாலை போக்கு வரத்து தொழிற்சங்க கூட்டுக்குழு வின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கார்ப்ரேட் முதலாளிகளின் நலனுக்காக மத்திய அரசு சேவைத் துறையாக உள்ள ரயில்வே உள் ளிட்ட பொதுப்போக்குவரத்து துறைகளை தனியார்மயப்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக புதிய மோட்டார் வாகன சட் டத்தை மத்திய அரசு நடை முறைப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அபராதம் என்கிற பெயரில் வாகன ஓட்டிகளிடம் வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். ஆகவே, மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை உடன டியாக திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து சாலை போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இருசக்கர வாகன பணிமனை பழுது பார்ப்போர் சங்கத்தின் மாநில பொருளாளர் கிசிங்கர் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலா ளர் சம்மேளனத்தின் மாநில செய லாளர் எஸ்.மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலளர் ஏ.எம்.ரபீக், டூரிஸ்ட் டேக்சி ஓட்டுனர் சங்கத் தின் செயலாளர் ராஜூ, எம்எல் எப் தொழிற்சங்கம் செயலாளர் ஜனார்ந்தனம், ஏஐடியுசி கணே சன், சாலை போக்குவரத்து சங் கத்தின் அப்துல்கலாம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உரை யாற்றினர். முன்னதாக, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, மோட்டார் வாகன சட்டத்தினால் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து சிறப்புரை யாற்றினார். இதில் ஏராளமா னோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப் பினர்.