tamilnadu

img

புதிய மோட்டார் வாகனசட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுக

கோவை, ஜூலை 16- புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும் பப் பெற வலியுறுத்தி கோவை யில் செவ்வாயன்று ஆட்டோ ஓட்டு னர்கள் மற்றும் உரிமையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.  கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட் டுனர்கள் மற்றும் அதன் உரிமை யாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் ரேபிட்டோ இருசக்கர டாக்சியை தடை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். புதிய மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். ஓலா, உபேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்ட ணத்தை உயர்த்த வேண்டும். இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும். மனிதாபிமானம் இல் லாமல் போக்குவரத்து காவலர்கள் விதிக்கும் அபராதத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

;