திருப்பூர், நவ. 30 - ஜனவரி 8ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூரில் ஏழு பகுதிகளாகப் பிரித்து போராட்ட ஆயத்தக்குழு அமைப்பதென தொழிற்சங்கங் கள் முடிவு செய்துள்ளன. திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் வெள்ளியன்று தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி மாவட் டச் செயலாளர் என்.சேகர், எல்பி எப் செயலாளர் ராமதாஸ், எம்எல் எப் நிர்வாகி பாண்டியராஜன், ஐஎன்டியுசி செயலாளர் அ.சிவ சாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்று ஜனவரி 8 வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்க பல்வேறு ஆலோசனைகள் தெரி வித்தனர். இதன் அடிப்படையில் திருப் பூரில் ஏழு பகுதிகளாகப் பிரித்து போராட்ட ஆயத்தக் குழுக்கள் அமைப்பது என்று முடிவு செய்யப் பட்டது. அத்துடன் முறைசாராத் தொழில்கள், சாலைப் போக்கு வரத்து சார்ந்த தொழில்கள், பின் னலாடைத் தொழில் என முப்பெ ரும் பிரிவுகளாக அந்தந்த துறை சார்ந்த தொழிலாளர்களிடம் வேலைநிறுத்தத்தின் நோக்கங் களைக் கொண்டு செல்வதுடன், பிரச்சாரம் மேற்கொள்வது என் றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் உழைக்கும் பெண் களை அணிதிரட்டி வேலைநிறுத் தப் போராட்டத்தைப் பற்றி விளக்கி அவர்களை முழுமை யாகப் பங்கேற்கச் செய்யவும் தீர் மானிக்கப்பட்டது. டிசம்பர் 25 வரை விரிவான முறையில் பிரச் சார இயக்கம் நடத்துவது, டிசம்பர் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை சக்தி மிக்க முறையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.