கோவை, ஆக. 29- விநாயகர் சதூர்த்தியை முன் னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து சமூக அமைப்பினர், காவல்துறை யினர், அரசு அதிகாரிகள் பங் கேற்ற அமைதி குழு கூட்டம் நடை பெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதூர்த்தி விழா அமைதியாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வியா ழனன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடை பெற்றது. இதில், மாவட்ட வரு வாய் அலுவலர் ராமதுரை முருகன், காவல்துறை இணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மற்றும் கோவை மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விழா ஏற்பாட் பாளர்கள், இஸ்லாமிய ஜமாத்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் பங் கேற்றனர். இக்கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தவறு கள் இந்த ஆண்டு நடக்காமல் விழா அமைதியாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர் வாகம் எடுக்கும். மேலும், நீர்நிலை கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ் டர் ஆப் பாரிஸ் இயற்கைக்கு எதி ரான செயற்கை வண்ணங்கள் போன்றவை பயன்படுத்தப்பட மாட்டாது. போக்குவரத்து பாதிக் கப்படாமல் ஊர்வலங்கள் நடை பெறும். பொதுமக்கள், வியாபாரி களிடம் யாராவது பணம் கேட்டு வந்து தொந்தரவு கொடுத்தால் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விழா தினத்தன்றும், அதற்கு முன்பும், பின்பும் டாஸ்மாக் மது பான கடைகளுக்கு விடுமுறை விட அரசுக்கு அறிவுறுத்தப்படும். வெளி யூர் ஆட்கள், வேறு பல பகுதிகளி லிருந்து இளைஞர்கள் வந்து தக ராறு செய்யாமல் காவல்துறை நட வடிக்கை எடுக்கும். யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்கப்படும். விழா ஒரு ஆன்மீக விழாவாக இருக்கும். புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. பிரச்சனைக்குரிய இடங்கள், கடந்த முறை பிரச்சனை நடந்த இடங்கள் அதிகப்படியான காவலர்கள் மூலம் சிறப்பு கவனம் செய்யப்படும். ஊர் வலத்தில் வருபவர்கள் ஆபாச வார்த்தைகள் பேசாமலும், மற்ற மதங்களை இழிவுபடுத்தாமலும், வன்முறையை தூண்டும் கோஷங் கள் எழுப்பாமலும் வருவதற்கு சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்வலம் வரும் வழியில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும், காவல்துறை யும், மாவட்ட நிர்வாகமும் பாது காப்பு அளிக்கும். விழா நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ பதிவுகள் செய்யப்பட வேண்டும். வதந்திகள், தவறான செய்திகளை பரப்பும் நபர்கள் மீதும், பத்திரிகை, ஊட கம் போன்றவற்றின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். ஆகவே, கோவை நகரின் அமைதிக்கு அனைவருட் ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள் ளது.