கோபி, மார்ச் 14- கோபிசெட்டிபாளையம் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த நாயையும், இரண்டு ஆடுகளையும் சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி விவசா யிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன் பாளையம் வனசரகத் திற்குட்பட்ட கொங்கர்பாளையம் காவல் சுற்றில் நயி னரப்பன்கரடு பகுதியில் வெள்ளியங்கிரி என்பரது தோட்டத்தில் காவலுக்கு கட்டி வைத்திருந்த நாயை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் தூக்கநா யக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நாயை கடித்துக் கொன்றது சிறுத்தைதான் என்பதை உறுதிசெய்து சிறுத்தை வந்த பாதையை, கால்தடங்களை வைத்து ஆய்வு மேற் கொண்டனர். இந்நிலையில், மற்றொரு விவசாயின் தோட்டத் தில் இருந்த வெள்ளாட்டுப் பட்டியில் புகுந்த சிறுத்தை இரண்டு வெள்ளாடுகளை கடித்துக் கொன்றது. அப்ப குதியிலும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அத னைதொடர்ந்து, கால்தடங்களை கண்டறிந்து தானி யங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விவசா யத் தோட்டங்களுக்குள் புகும் சிறுத்தையானது ஆடு மற்றும் நாய்களை கொன்று வருகிறது. தற்போது நான்காவது முறையாக இது போன்ற சம்பவம் நடை பெற்றுள்ளது. ஆகவே, கால்நடைகளை வேட்டை யாடி வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்திட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.