tamilnadu

img

இலவச பேருந்து பயண அட்டை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில், மாற்றுத்திறனாளிகளான பேச இயலாத, காது கேளாதோர் நலச் சங்க 10-ஆவது ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா சரீப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.சிராஜுதீன், பொதுச்செயலாளர் மனோகர் செல்வநாதன், இணைச் செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஆர்.மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். நலச்சங்க ஏழை, எளிய உறுப்பி னர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவை அரசு  வழங்க வேண்டும். விடுபட்ட  உறுப்பினர்க ளுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்திராகாந்தி யூத் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் கே.மகேந்திரன், பேச இயலாத, காது கேளாதோர் நலச்சங்க அலுவலகத்திற்கான மாதாந்திர வாடகை கட்டணத்தை செலுத்துவதாக உறுதியளித்தார். அனைவருக்கும் முன்னாள் பொதுச்செயலா ளர் நூருல் அமீன் நினைவாக டிராவல் பேக் வழங்கப்பட்டது.