கோவை, அக்.8- கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை விற்பது போல மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், கொரோனா ஊர டங்கை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மற்றும் விற்பது போல மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் செயல் படும் மோசடி கும்பல்கள், விலை அதிகமான பொருட்களை ஆன்லைனில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம் பரம் செய்கின்றன.
அந்த பொருளை வாங்க முன் வரும் நபரிடம், பணத்தை தாங்கள் அனுப்பும் QR கோட்டில் செலுத்த சொல்கின்றனர். பணம் QR கோட்டில் செலுத்தப்பட்டவுடன் பொருளை அனுப்பாமல் ஏமாற்றுகின்ற னர். இந்த வகையான மோசடியை UP, QR Scan, Scam என்று அழைக்கிறோம். மேலும், ஆன்லைனில் இருசக்கர வாக னத்தின் புகைபடத்தை பதிவிட்டு, அதை விற்பது போல பேசியும் மோசடி செய்கின்றனர். அவை பெரும்பாலும், ராணு வத்தில் பணிபுரிவதாக கட்டிக்கொண்டு, பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். கோவையில் ஊரடங்கு காலத்தில் இது போன்று ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள் ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறோம். எனவே, இந்த மாதிரியான மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.