பொள்ளாச்சி, ஆக. 27- ஆனைமலை புலிகள் காப்பகத்தி லுள்ள பழங்குடியின மக்களுக்கு அனு பவ உரிமை பட்டா வழங்கிட நடவ டிக்கை எடுக்கப்படும் என செவ்வா யன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோ சனை கூட்டத்தில் வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட கல்லாறு, நாகரூத்து உள்ளிட்ட வன கிராமங்களுக்கு அனுபவ உரிமை பட்டா வழங்கிடக்கோரி, அப்பகுதி மக்கள் கடந்த ஆக.15 ஆம் தேதியன்று வனத்திற்குள் குடியேறும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அனைத் துக் கட்சி கூட்டியகத்தினர் வனத்துறை மற்றும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.21ஆம் தேதியன்று மனு அளித்த னர். இதனைத்தொடர்ந்து எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில், செப். 3ஆம் தேதியன்று வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுவதாக அறி வித்திருந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவல கத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோ சனை கூட்டத்தில், ஆனைமலை புலி கள் காப்பக பொள்ளாச்சி கோட்ட இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர், உதவி வன பாதுகாவலர் செல்வம், வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், வால்பாறை வட்டாட்சியர் ராஜா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி வட்டாட்சியர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் வனத்துறை அதிகா ரிகள் கூறுகையில், ஆனைமலை புலி கள் காப்பகத்தில் 17 வன கிராமங்கள் உள்ளன. அதில், 208 பேருக்கு அனுபவ உரிமை பட்டா மூன்று நாட்களுக்குள் வழங்கப்படும். கல்லாறு செட்டில் மென்ட் பழங்குடியின மக்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தற்காலிக மாக தங்கியுள்ள குடியிருப்பிலேயே அவர்கள் வசிக்கலாம். அப்பகுதி மக்க ளின் பிரதான கோரிக்கையான தெப் பக்குளம் மேடு பகுதியில் மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக உதவி வன பாதுகாவலர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர், வால்பாறை காவல் ஆய்வாளர் ஆகி யோர் அடங்கிய குழுவினர் நேரடியாக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். இப்பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி, தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கு அம்மக்களின் கோரிக்கை பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தனர். வனத்துறையினரின் இந்த அறி விப்பை பொள்ளாச்சி அனைத்துக் கட்சி கூட்டியக்கமும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமும் வரவேற்றுள் ளது.