tamilnadu

img

கோவை அருகே கால் டாக்ஸி ஓட்டுனருக்கு கத்தி குத்து

கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை திருடி சென்ற நபரை போலீசார்  கைது செய்தனர்.
கோவை கால் டாக்ஸி ஓட்டுனரிடம் அடையாளம் தெரியாத இருவர் மதுரை செல்லவேண்டுமென பேசியுள்ளனர்.அதனடிப்படையில் கோவையிலிருந்து -மதுரைக்கு செல்லும் வழியில் காரில் வந்த இருவர் சூலூர் அருகே தீடீரென ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு  காரை திருடிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் டீக்கடைக்காரர் ஒருவர் அளித்த தகவலின் பேரில்  திருப்பூர் மாவட்ட எல்லையில் நல்லூர் சோதனை சாவடியில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்திய போது ஒருவர் தப்பியோட மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.  இருவரும் அந்தமான் நிக்கோபார் தீவினை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.  படுகாயமடைந்த ஓட்டுனரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து காரை கடத்தியதற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


 


 

;