பொள்ளாச்சி, செப்.3 - பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகு தியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச் சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் வழக் கத்தை விட நீர் ஆர்ப்பரிப் புடன் கொட்டுகிறது. இதை யடுத்து சுற்றுலாப்பயணி களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இரண் டாவது நாளாக செவ்வா யன்றும் சுற்றுலாப் பயணி கள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.