தருமபுரி, ஜூலை 12- அரசு மருத்துவமனைகளில் காலி யாக உள்ள மருத்துவப் பணியிடங் களை நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட் டம் நடைபெற்றது. மருத்துவர்களின் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளி களின் சேவைக்கே ஏற்ப மருத்துவ பணி யிடங்களை அமல்படுத்த வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாண வர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழக சுகாதாரத் தின் அடித்தளம் காத்திட அரசு மருத் துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதவிஉயர்வு,சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளியன்று மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் தர்ணா போராட் டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு நடை பெற்ற தர்ணா போராட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருத்துவர் சீனி வாசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மருத்துவர் லக் ஷ்மிநரசிம் மன், மாவட்ட செயலாளர் மருத்துவர் கெளரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் அரசு மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்ற தர்ணா போராட் டத்தில் சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் செந்தில் செய்தியாளர்களிடம் பேசு கையில், சேலம் அரசு மருத்துவமனை களில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், 300க்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசு குறைத்துள்ளது. நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், பணியி டக் குறைப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, நோயாளி களுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இதன்காரண மாக அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். அடுத்தகட்டமாக, சென் னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் வெளி நோயா ளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்கும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.