tamilnadu

img

சாதி இழிநிலையை கொளுத்துவோம்- மக்கள் ஒற்றுமையை காப்போம் தந்தை பெரியார் பிறந்தநாளில் உறுதிமொழியேற்பு

கோவை, செப்.17- மக்களை பிரிக்கும் சாதி இழி நிலையை கொளுத்துவோம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் என பல்வேறு அமைப்பினர் தந்தை பெரி யார் பிறந்தநாளில் உறுதிமொழி யேற்றனர். தந்தை பெரியார் அவர்களின் 141 ஆவது பிறந்தநாள் விழா தமிழ கம் முழுவதும் செவ்வாயன்று எழுச் சிகரமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக  கோவையில் திமுக, சிஐடியு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி,  தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள், கலைஞர்கள் சங்கம், ஆதித் தமிழர் பேரவை, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்பினர் தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதி ராகவும், தீண்டாமை கொடுமை, மூடப் பழக்கத்தை வேரறுக்கவும், பெண்ண டிமைத்தனத்தை வீழ்த்தவும், மக்கள் ஒற்றுமை காக்கவும் உறுதிமொழி யேற்றனர்.  முன்னதாக, கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் முழு உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணை தலைவர் கே.மனோகரன், என்.செல்வராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, பொரு ளாளர் எம்.கஜேந்திரன், கிழக்கு நகர செயலாளர் த.நாகராஜ், அம்பேத்கர் பயிற்சி மைய ஒருங்கினைப்பாளர் கே.கணேஷ், தமுஎகச நிர்வாகிகள் மு.ஆனந்தன், தி.மணி, அப்துல்கரீம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி உறுதிமொழியேற்றனர்.  இதேபோல், காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். முன்னதாக காந்திபுரம் அண்ணா சிலையிலிருந்து ஊர்வல மாக வந்து மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், தலைவர் ஆறுச்சாமி உள்ளிட்டோரும், ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாவட்ட தலைவர் இனியவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  கோவை மின்வாரிய தலைமை யகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில் மாண வர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, தலைவர் சம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பஞ்சமி நிலங் களை மீட்க தனிச்சட்டம் இயற்று என்கிற முழக்கத்தோடு  சமூக நீதிக் கட்சியின் சார்பில் பேரணி நடை பெற்றது. சமூக நிதிக்கட்சியின் தலை வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் துவக்கி வைத்தார். இப் பேரணியின் முடிவில் பஞ்சமி நில மீட்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோட்டில், மதச்சார்பற்ற முற் போக்குக் கட்சிகள் சார்பில் பெரியார் உருவபடத்தை ஏந்தி ஊர்வலம் நடை பெற்றது. முடிவில், பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள், புரட் சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், காந்திய மக்கள் இயக்கம், நீரோடை, திரா விடர் விடுதலை கழகம் உட்பட 17 அமைப்புகள் பங்கேற்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். இதில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஈரோடு மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச்சாமி, நகரச்  செயலாளர் சுரேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்ரமணியன், ஜி.பழனிசாமி, நகரச் செயலாளர் சுந் தர்ராஜன், தமுஎகச மாவட்டத் தலை வர் ந.சின்னையன், மாவட்டச் செய லாளர் மு.சங்கரன், சாலைப் போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் கனக ராஜ், பிஎஸ்என்.எல் ஓய்வூதியர் சங் கத் நிர்வாகி பழனிச்சாமி, கோபி கால்நடை மருத்துவர் மோகன சுந்தர்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.