tamilnadu

img

மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வாலிபர் சங்கம் உறுதிமொழியேற்பு

கோவை, மார்ச் 23–  இந்திய விடுதலை போராட்ட களத்தில் இளம் வயதில் தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய தியாகிகள் நினைவுநாள் மக்கள் ஒற்றுமை உறுதிமொழியேற்பு  நிகழ்வாக திங்களன்று வாலிபர் சங்கத்தினரால் எழுச்சியோடு  அனுசரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கிளைகளில் பல்வேறு பகுதி களில் உறுதிமொழி மொழி ஏற்பு நிகழ்வுகள் நடைபெற்றன.  எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் சிவா னந்தபுரம், சின்னவேடம்பட்டி, உடையாம்பாளையம், ஆர்.ஜி. புதூர் உள்ளிட்ட கிளைகளிலும், அன்னூர் ஒன்றியம், ஒட்டர் பாளையம் , இந்திரா நகர், அல்லிக் காரன்பாளையம் , குமாரபாளை யம் பகுதிகளிலும், கோவை கிழக்கு நகரக்குழு சார்பில் பவர் ஹவுஸ், சித்தாபுதூர், சிங்கை நகரக் குழு 62 வது வட்டம்,  மதுக் கரை ஒன்றியம் வெள்ளலூர், ஒக்கிலிபாளையம் ஆகிய கிளை களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு கள் நடைபெற்றன. இதேபோல வாலிபர் சங்க மாவட்ட குழு அலு வலகம் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், சூலூர் தாலுகா, கோவை வடக்கு நகரக் குழு உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் இந்த உறுதிமொழி யேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்டச் நிர் வாகிகள் அர்ஜுன், எஸ்.துரைசங் கர், விவேகானந்தன், நிசார் அக மது, ராஜா, கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

திருப்பூர்
இதேபோல் திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் கங்கா நகர், போயம் பாளையம், விஜயபுரிகார்டன், ஆத்துப்பாளையம், சமத்துவபுரம், குருவாயூரப்பன் நகர் ஆகிய பகு திகளில் மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத்தை முன்னிட்டு கொரனோ விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெற்றது. இதில் வாலிபர் சங்க  வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள், கமிட்டி உறுப்பினர் கள் பாலகேசவன், தன்ராஜ் சந் தோஷ், விக்னேஸ், இம்ரான், மனோஜ், தரணீஷ் உள்ளிட்டோர் தலா 5 பேர் கொண்ட 12 குழுக்களா கச் சென்று கொரோனா விழிப்பு ணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட னர்.

சேலம்
சேலம் மாவட்டம், களரம்பட்டி  சமுதாயக் கூடம், நெல்லுக்குத்தி பாறை பகுதியில் மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாநகரச் செயலா ளர் வீரமணி, வாலிபர் சங்க மாந கரச் செயலாளர் பெரியசாமி, தலை வர் பிரபாகரன், பொருளாளர் வடி வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.