tamilnadu

img

உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு பாரபட்சம் இல்லாமல் இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், பிப். 21 – உயர்மின்கோபுரம் அமைக்கும் பகுதிகளில் விவசாயிகளுக்குப் பாரபட்சம் இல்லாமல் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவ சாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்துப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நமது மாவட்டத்தில் விவசாயிகள் விருப்பத்திற்கு மாறாக ஏராளமான உயர்மின் பாதை கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டு வருகிறது. மின் கோபுரம் அமைப்பதால் நிலம் மதிப்பு இழந்துவிடுகிறது. மரப்பயிர் செய்யமுடியாது, தற்போது பயிர் செய்துள்ள தென்னை உள்ளிட்ட பயிர்கள் அகற்றப்படுகின்றன.

அப்படி, அகற்றப்படும் தென்னை மரத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி தாலுகா, செங்கப் பள்ளி கிராமம், பாச்சாங்காட்டுப் பாளையம் சுள்ளிக்காடு தோட்டத்தில் பைப் கம்பெனியின் பழைய சாயக் கேன்களை சுத்தம் செய்து உடைத்து மூலப்பொருட்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இதில், உள்ள சாயம் அப்படியே பூமியில் இறங்குகிறது. இதனால், அப்பகுதி யில் ஆழ்துளை குழாய் கிணறு, விவசாயக்கிணறுகளிலும் சாயக் கழிவு நீர் இறங்குகிறது. மேலும், ஊத்துக்குளி தாலுகா, கவுண்டம் பாளையம் கிராமம் பகுதியில் தனியார் பிரிண்டிங் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்கம்பெனிகள் பெயரளவில்  மட்டும் சாயக்கழிவுகளை சுத்தம் செய்து அப்படியே வெளியேற்றுகிறது. இதனால், இப்பகுதி குடிநீர், விவசாய நிலம் மாசு அடைகிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும், அரசூர் முதல் புகளூர் வரை உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு உரிய இழப்பீடு நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால், இதுவரை எந்த நட வடிக்கையும் இல்லை என்று கூறி னார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வன் கூறியதாவது: உடுமலை மலைப் பகுதியில் மலைவாழ் மக் கள் 15 மலை செட்டில்மெண்ட் குடி யிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு 2006 வன உரிமைச் சட்டப்படி தனிநபர் உரிமையும், சமூக உரிமையும் கேட்டு விண்ணப் பித்திருந்தோம். அந்த அடிப்படையில் வன உரிமை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருவாய்த்துறை நில அளவீடு செய்யப்பட்டது. அளவீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பட்டா வழங்க வன உரிமை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோட்ட அளவிலான குழுவிற்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வன உரிமை கோட்ட அளவிலான குழுவில் வன கிராமங்களான மாவடப்பு, காட்டுப்பட்டி, குழி பட்டி, குருமலை, திருமூர்த்திமலை, மேல்குருமலை ஆகிய குடியிருப்பு களுக்கு பட்டா வழங்கலாம் என வும், சமூக உரிமைகளுக்கான சாலை வசதி பொன்னாலம்மன் சோலை, குழிப்பட்டி வரையிலும் சாலை அமைத்து தர வேண்டும். மேலும், மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை ஆகிய பகுதிகளில்  2014 ஆம் ஆண்டு முதல் சத்துணவு ஊழி யர்கள் வேலை செய்து வருகிறார். இவரது, சம்பளம் இதுவரை ரூ.2,000 மட்டுமே ஆகும். இவர் வெகு தூரம் நடந்து சத்துணவிற்கு தேவையான பொருட்களை சுமந்து சென்று சிரமப்படுகின்றார். இந்த தொகை போதுமானதாக இல்லை. ஆகவே, பணி நிரந்தரம் செய்து சம் பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சிவக்குமார்: தாராபுரம் பகுதியில் பிஏபி தண்ணீரை மேல்மடை பகுதி யில் உள்ளவர்கள் மோட்டர் வைத்து திருடிக் கொள்கின்றனர். இதனால், கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. கடந்த 19ஆம் தேதி தாராபுரத்தில் இந்து அமைப்பினர் கடையடைப்பு நடத்தினர். இதனால், விவசாயிகள் வியாபாரத்திற்கு கொண்டு வந்த காய்கறிகளை விற் பனை செய்யமுடியாமல் குப்பை யில் வீசிச் சென்றனர். மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்து நோட்டீஸ் ஒட்டினால் அதை போலீசார் கிழித்து, எங்கள் மீது வழக்குபதிவு செய்கின்றனர். ஆனால், இந்து அமைப்புகள் அரசு அலுவலகத்தின் சுவர்களில் ஒட்டியுள்ளனர். அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவது சரியா என கேள்வி எழுப்பினார்.

சின்னமுத்தூர் கிராமத்தில் அனு மதியில்லாமல் கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இதனால், ஈக்கள் தொல்லை அதிகரித்து மக்காச்சோளத்தை சேதப்படுத்து கிறது. எனவே இதன் மீது நடவடிக்கை எடுத்து கோழிப்பண்ணையை மூட வேண்டும். தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் கால்வாய் கரையில் மின்கம்பம் அமைத்துள்ளனர். இதனால், வரும் காலத்தில் கால்வா யில் தண்ணீர் அதிகரித்தால் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறினார். உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது, அவிநாசியிலிருந்து ஒட்டன்சத்திரம் வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரிலிருந்து தாராபுரத்தில் இடையில் அமைந் துள்ள சுங்கச்சாவடி ஆறு ஊர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவ சாயம் முழுவதும் பாதிக்கும். மேலும் மழைக்காலங்களில் வரும் நீர் இனிமேல் அருகிலுள்ள விவசாய பூமியில் சென்றால் விவசாயம் செய்ய முடியாது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூர்வாரி நீர் நிலையைப் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தாராபுரம் விவசாயிகள் சங்க நிர் வாகி காளிமுத்து: தாராபுரம் வட் டம் குண்டடம் ஒன்றியம் சங்கராண் டம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட வடுகபாளையத்தில் இருந்து கோவில்பாளையம் செல்லும் தார்ச் சாலை  மிகவும் பழுதடைந்துள்ளது. வரப்பாளையம் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக வேலை பார்ப் பவர் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. ஏழை, எளிய குழந் தைகளை அடிப்பதும், அவர்களை வைத்தே கழிவறை சுத்தம் செய்வ தும், பள்ளிகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்துகிறார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்இது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட அவிநாசி, தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு உற்பத்தி பெரும் அளவில் செய்து வருகின்றனர். தற்போது பட்டு விலை ரூ.580 வரை விற்கப்படுகிறது. ஆனால், விவசாயி களின் சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகள் ரூ.300 மட்டுமே கொடுக்கின்றனர். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.