அவிநாசி, ஆக. 18- அவிநாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை யால் மானாவாரி நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவ சாயிகள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதி மானாவாரி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும். கானூர் ஆலத்தூர், முறியாண்டம்பா ளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், புஞ்சை தாமரைக் குளம், வடுகபாளையம், உள்பட பல கிராம பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சி யாக மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கடந்த வைகாசி மாதம் நிலக்கடலை பயிரிட்ட பகுதிகளில் நிலக் கடலை சாகுபடி செய்த விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வைகாசி மாத கடைசி வாரம் மற்றும் ஆனி மாத முதல் வாரத்தில் பெய்த மழை யால், மானாவாரி நிலங்களில் விதைத்த நிலக்கடலை செடிக ளில் பிஞ்சுகள் பிடிக்க ஆரம் பித்து விட்டது. ஆனி மாத கடைசி வாரத்தில் நிலக்கடலை பயிரிட்டவர்கள் தற்போது இந்த மழைக்கு களையெடுத்து வருகிறார்கள். மேலும் பருவ மழையானது தொடர்ந்து 15 நாட் களுக்கு ஒரு முறை புரட்டாசி மாதம் வரை பெய்தால் மானா வாரி நிலத்தில் பயிரிட்டுள்ள நிலக்கடலை நல்ல விளைச் சலைக்கொடுக்கும். சென்ற ஆண்டை விட இந்தாண்டு நிலக் கடலை விளைச்சல் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கிறோம் எனத் தெரிவித்தனர்.