உடுமலை, அக். 12- உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உழவர் பாது காப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம், தற்காலிக இயலாமை ஓய்வூதியம் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் போன்ற திட்டத்தின் கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் உழவர்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்,பெண் உறுப்பினர்களுக்கு திரு மண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை குறித்த மனுக்கள் பெறப்பட்டன.