tamilnadu

img

திருப்பூரில் குடும்ப நல நீதிமன்றம் திறப்பு

திருப்பூர், மார்ச் 13 – திருப்பூரில் குடும்ப நல நீதிமன்றத் திறப்பு விழா வெள்ளியன்று நடை பெற்றது. திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப் பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்தி கேயன் முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி தலைமை வகித்து நீதிமன்றத்தை திறந்து வைத்தார். பிற நீதிமன்றங்க ளின் நீதிபதிகள், அரசு வழக்கறி ஞர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். திருப்பூரில் குடும்ப நல வழக்குகள் இதுநாள் வரை முதன்மை மாவட்ட நீதிமன்றம், முதலாவது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்தன. தற்போது தனியாக குடும்ப நல நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் மேற்கூறப்பட்ட நீதி மன்றங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வரும் குடும்ப நலம் சார்ந்த வழக்குகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற் றப்படவுள்ளன. இதன் மூலம், நிலு வையில் உள்ள வழக்குகள் மற்றும் புதிய வழக்குகளில் விரைவாக தீர்வு காண இயலும் சூழல் ஏற்பட்டுள்ளது.