tamilnadu

img

பென்னாகரம், அரூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பென்னாகரம், மே 17-பென்னாகரம் மற்றும் அரூரில் வட்டாரத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சிறப்பு விதிகள் 2012 ன் படி தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி செயல்பாட்டில் உள்ள அனைத்து வாகனங்களிலும் இயக்கத்திற்கு உரிய தகுதி உள்ளதா என இந்த ஆய்வின்மூலம் உறுதி செய்துவாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறதுஇதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்கள் ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பென்னாகரம் தனியார் பள்ளி அலுவலகம் அருகில் வாகனங்கள் தர நிலை குறித்து கண்டறியும் ஆய்வு தொடங்கியது. ஆய்வுக்கு உட்படுத்த வாகனத்தில், விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக வாகனத்திலிருந்து மாணவ, மாணவிகள்வெளியேற்றுவதற்கான அவசர வழிஅமைக்கப்பட்டுள்ளதா என்பதுகுறித்தும் மோட்டார் வாகன ஆய்வாளர் என.மணிமாறன் மற்றும் ஏ.ராஜாமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.மேலும், ஆய்வின் போது குறைகளைக் தண்டனை பெற்ற வாகனங்கள் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர் குறைகளைச் சுட்டிக் காட்டப்பட்டது. பள்ளி வாகனங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்க முறைகள் குறித்து பள்ளி செல்லும் குழந்தைகளை பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி விடும் முறை மற்றும் வாகனத்தில் இருந்து இறக்கி விடும் முறை குறித்தும் இந்த ஆய்வின்போது அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதேபோல், வாகனங்கள் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு உரிமங்கள் நடப்பில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதைபோல், அரூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள், நம்பிப்பட்டியில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆய்வு பணியை தொடங்கி வைத்தார். அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், கண்காணிப்பாளர் செல்வமணி, கண் மருத்துவர் கலையரசன், அரசு மருத்துவர் அருள் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனங்கள், ஓட்டுநர்களை ஆய்வு செய்து சான்று வழங்கினர். ஆய்வின் போது, ஓட்டுநர்களுக்கு மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். இதில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 41 தனியார் பள்ளிகளின் 290 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 22 பேருந்துகளின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. 17 பேருந்துகள் குறைபாடுகள் நிவர்த்தி செய்ய திருப்பி அனுப்பப்பட்டன.