tamilnadu

நவீன வசதி இல்லாத இஎஸ்ஐ கிளை அலுவலகம் திருப்பூர் தொழிலாளர்கள் சேவை பணியில் மந்தம்

திருப்பூர், ஜூன் 19 - பல லட்சம் தொழிலாளர்கள் வசிக்கக் கூடிய திருப்பூர் மாநகரில் இஎஸ்ஐ கிளை அலுவலகம் போதிய பணியாளர்கள், நவீன  வசதிகள் இல்லாமல் இருப்பதால் தொழி லாளர் சேவை மந்தகதியில் நடைபெற்று வருகிறது. பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதில்  இரண்டு லட்சம் பேர் இஎஸ்ஐ சந்தாதாரர் களாக இருக்கின்றனர். அனைத்துத் தொழி லாளர்களை இஎஸ்ஐ சந்தாதாரர்களாக மாற்ற வேண்டியிருந்தாலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் இதில்  அக்கறை காட்டுவதில்லை. தொழி லாளர்கள் விரும்புவதில்லை என்று காரணம் சொல்லி இஎஸ்ஐ சந்தா சேர்ப்பு  கணக்கை பெயரளவுக்கு மேற்கொள் கின்றனர். ஏற்றுமதி நிறுவனங்களைப் பொறுத்த வரை சமூக தணிக்கை என்ற பெயரில் வர்த்தகர்கள் கவனிப்பதால் ஓரளவு இஎஸ்ஐ பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. அதேசமயம் உள்நாட்டு உற்பத்தி தொழிலகங்களில் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ பதிவு செய்வது மிக மிகக் குறை வாக உள்ளது என்று இஎஸ்ஐ நிர்வாகத் தினர் கூறுகின்றனர். திருப்பூர், அவிநாசி பகுதி தொழிலாளர் களுக்கு கொங்கு நகர் திருநீலகண்டபுரம், ஓடக்காடு ஆகிய இரு இடங்களில் இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வரு கின்றன. இங்கு தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மூலம் கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இஎஸ்ஐ ஓய்வூதிய பயனாளிகளும் இந்த  கிளை அலுவலகங்கள் மூலம் பயனடை கின்றனர். 

மத்திய அரசு பல்வேறு துறைகளில் கணினிமயம் ஆக்கியிருப்பது போல இஎஸ்ஐ நிறுவனத்திலும் கணினிமயம் செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறது. ஆனால்  பல லட்சம் தொழிலாளர் இருக்கும் திருப் பூரில் இன்னும் கணினிமயம் ஆக்கப்பட வில்லை. இதனால் பழைய முறையிலேயே பணிகள் நடைபெறுகின்றன. காகிதங்கள்  மூலம் நடைபெறும் பணியை மேற்கொள்வ திலும் போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் தொழிலாளர்கள் தங்களுக்கான சேவையைப் பெறுவதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இஎஸ்ஐ நிறுவனத்திற்கு திருப்பூர் தொழிலாளர் மூலம் கிடைக்கும் பங் களிப்புத் தொகை பல கோடி ரூபாய் உள்ளது. எனினும் இங்குள்ள தொழி லாளர்களுக்கு சேவையை மேம்படுத்து வதிலும், துரிதமாக சேவை கிடைப்பதிலும் இஎஸ்ஐ நிர்வாகம் அக்கறை இல்லாமல் இருப்பதையே தற்போதைய நிலை காட்டுகிறது. எனவே இஎஸ்ஐ கிளை அலுவலகங் களை உடனடியாக கணினிமயம் செய்வ துடன், பயிற்சி பெற்ற பணியாளர்களை தேவையான எண்ணிக்கையில் பணிய மர்த்தி தொழிலாளர்களுக்கு உரிய சேவை களை விரைந்து கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தினர், தொழிலாளர்கள் வலியுறுத்து கின்றனர்.