உணவு, ஜவுளி பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வணிகர் சங்கங்கள் வலியுறுத்தல்
ஈரோடு, ஜூலை 25- உணவு, ஜவுளி பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட, மாநகர நிர் வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர் ஆர்.எம்.தேவராஜா தலைமை யில் ஈரோட்டில் நடந்தது. இதில், மத்திய பட்ஜெட்டில், வணிகர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அறிவித்துள்ள னர். இத்திட்டத்தை, அவர்கள் செலுத் தும் வரிக்கு ஏற்ப வழங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். பெட் ரோல், டீசல் மீதான, ஒரு சதவிகித வரியை நீக்கவேண்டும். தங்கம் மீதான இறக்குமதி வரி 12.5 சதவிகி தம் என்பதை, 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். செய்தித்தாள் காகிதம் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தை நீக்க வேண்டும். சாய – சலவை பட்டறைகளின் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காண, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்குவதுபோல, வணி கர்களுக்கு வணிக கடன்அட்டை வழங்க வேண்டும். சுங்கசாவடிகளை நீக்க வேண்டும். தேசிய வணிகர் நல வாரியத்தை அமல்படுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட துணை தலைவர் செல்வம் மற் றும் மாநில இணை செயலாளர் ந.சிவ நேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். மாவட்ட துணை செயலாளர் பி.மாதேசுவரன் நன்றி கூறினார்.
போலி சான்றுடன் இயங்கிய கேஸ் பங்க்கிற்கு சீல்
ஈரோடு, ஜூலை 26- அந்தியூர் பகுதியில் உரிய அனுமதியின்றி இயங்கிய கேஸ் பங்க்கிற்கு வியாழனன்று சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், தவிட்டுப் பாளையம் பகுதியில் கோ கேஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த பங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், போலியான தடையின்மை (NOC) சான்று தயார் செய்து இயங்கியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்நிறு வனத்திற்கு வியாழனன்று சீல் வைக்கப்பட்டது. மேலும், சட்ட ரீதியான நடைவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று சட்டத்திற்குப் புறம்பான விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா எச் சரித்துள்ளார்.
மறுநடவு செய்து மரத்திற்கு மறுவாழ்வு தந்த இயற்கை ஆர்வலர்கள்
மே.பாளையம், ஜூலை 25- நெடுஞ்சாலை விரிவாக்க பணிக் காக சாலையோரத்தில் இருந்த நாற் பது வயது ஆய மரம் அகற்றப்பட்டு, வனப்பகுதியில் மீண்டும் மறுநடவு செய்து இயற்கை ஆர்வலர்கள் மரத் திற்கு மறுவாழ்வு தந்துள்ளர். கோவையில் இருந்து மேட்டுப் பாளையம் வரையிலான 40 கிலோ மீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை யாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலை விரிவாக்கம் செய்யப்படு வதால் சாலையின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டி அகற்றி சாலை அமைத்து வருகின்ற னர். இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாய் சாலையில் செல்லும் பயணிகளுக்கு நிழலின் குளிர்ச்சியைத் தந்து பசுமையாய் காட்சியளித்து கொண்டிருந்த மரங் கள் அடுத்தடுத்து வெட்டப்படுவது இயற்கை நல ஆர்வலர்களை கவ லையடைய வைத்தாலும் போக்கு வரத்து வசதிக்காக என்பதால் வெட் டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை நட்டு பராமரிக்க நெடுஞ் சாலைத்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளை யம் பகுதியில்சாலையோரம் இருந்த 30 அடிக்கும்மேல் வளர்ந்த 40 வயது ஆய மரம்ஒன்று சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட இருந்தது. இந்த வகை மரங்கள் பெரும்பாலும் வனப்பகுதியில் வளரக்கூடிய அரிய வகை மரம் என்பதால் இதனை வேரோடு பிடுங்கியெடுத்து அரசு துறைகளின் அனுமதியோடு வனத் தினுள் மறுநடவு செய்ய ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சையத் மற்றும் அவரது குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். இதன்படி வியாழனன்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை, வன துறை, வட்டார போக்குவரத்து துறை, வருவாய்துறை, காவல் துறை அதிகாரிகளின் மேற்பார்வை யில், ஓசை மற்றும் நமது மேட்டுப் பாளையம் அமைப்பைச் சேர்ந்த இயற்கை நல ஆர்வலர்கள் ஒருங்கி ணைத்து மரத்தை வேரோடு எடுக் கும் பணி நடைபெற்றது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆய மரத்தைச் சுற்றி பள்ளம் தோண்டப் பட்டு பின்னர் அதன் வேர் பகுதி காயப்படாமல் அப்படியே தூக்கி லாரியில் ஏற்றினர். பின்னர் மரம் வளர்ந்த இடத்தின் உயிர் மண்ணோடு சேர்த்து கோத்தகிரி செல்லும் சாலை யில் உள்ள மேட்டுப்பாளையம் வன துறைக்குச் சொந்தமான மரக்கி டங்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதி யில் மறுநடவு செய்யப்பட்டது. ஆய மரம் பறவைகள் விரும்பி கூடுகட்டி வாழும் காட்டு மர வகை யினைச் சேர்ந்தது. இதன் விதை பரவலால் வனம் செழிப்படையும். எனவே, முதல் முறையாக சாலை யோரம் இருந்த மரம் வனப்பகுதி யில் தொடர்ந்து வளர கோவை மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் வசந்தாமணி, வன சரக அலுவலர் மேற்பார்வையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மரம் மறுநடவு செய்யபட்டது மகிழ்ச் சியளிப்பதாக வனத்துறை மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்த னர்.
பா.ஜ.க நிர்வாகி மீது வழக்கு பதிவு
கோவை, ஜூலை 25- கோவையில் பாஜக தேசிய இளைஞரணி துணை தலைவராக முருகானந்தம் என்பவர் உள்ளார். இவரின் மாமனார் சுந்தரசாமியை முருகானந்தம் தாக்கியதாக கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய மறுத்தனர். இதனை எதிர்த்து சுந்தர சாமி நீதிமன்றம் சென்றார். இதையடுத்து கோவை நீதி மன்ற உத்தரவு படி கந்தேக வுண்டன் சாவடி காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.