சட்டமன்றப் பேரவை பொது நிறுவனக்குழு ஆய்வு
ஈரோடு, ஆக. 26- ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் செவ்வாயன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2018-20-ம் ஆண்டிற் கான பொது நிறுவனங்கள் குழு தலைவர், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை தலைமையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஆக. 27 மற்றும் 28 ஆகிய இருநாட்கள் ஈரோடு மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் பார்வையிட்டு, துறை சார்ந்த அலு வலர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம், தமிழ் நாடு தொழில் முன்னேற்றக்கழகம், மின்சாரத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுநிறுவனங்கள் மற்றும் கனிமவளம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளு டன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆக.28ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் தணிக்கை பத்திகள் மற்றும் நடவ டிக்கைகள், மேற்கொண்ட பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள், பணியா ளர்கள் நியமிப்பது, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
நச்சுப்புகையால் காற்று மாசுபாடு நடவடிக்கை கோரி முறையீடு
ஈரோடு, ஆக. 26- சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பவுடர் கோட்டிங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு, மாரப்பா 1, 2ம் வீதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: மாரப்பா வீதியில் பவுடர் கோட்டிங் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, அலுமினிய பைப்களுக்கு ரசா யன கலவையை பயன்படுத்தி, கோட்டிங் செய்யும் பணி நடக்கிறது. இரும்பு பைப்களுக்கும் கோட்டிங் கொடுக்கின் றனர். இந்நிறுவனத்தை சுற்றிலும், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதைத் தவிர, மருத்துவமனை, தியேட்டர், சிறு வணிக நிறுவனங் கள் என பலவும் உள்ளன. இந்நிறுவனத்தில் இருந்து அலுமினிய பவுடர், ரசாயன கழிவு மற்றும் துர்நாற்றம், பல வண்ணங்களில் கழிவு நீர் வெளியேற்றம் என பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றால், காற்று, நீர் ஆகியவை மாசுபட்டு பொது மக்களால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, இதுபோன்ற ஆலைகளை, குடியிருப்பு பகுதியில் அனு மதிக்கக்கூடாது என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு,ஆக.26- ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் - 2019 -ஆம் மாதத் திற்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஆக.30 (வெள் ளிக்கிழமை) காலை10 மணிக்கு நடைபெற உள் ளது. ஆகவே, விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசா யம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். இது தொடர்பாக அலுவலர்க ளின் விளக்கங்கள் அன் றைய தினம் தெரிவிக்கப்ப டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.