tamilnadu

நல வாரிய இருப்பு ரூ.1,787 கோடி

திருப்பூர், ஜூலை 2- தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஏறத்தாழ ரூ.1,787 கோடி  இருப்புத் தொகை இருக்கும் நிலையில், தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் பணப்பயன் வழங்க வேண்டும் என்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் அண்மையில் அனைத்து கட்டுமானத் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார், ஏ.ராஜன், பத்மநாபன், எல்பிஎப் சார்பில் செயலாளர் நாராயணசாமி, சு.பூபதி, ரங்கசாமி, எம்எல்எப் சார்பில் மனோகர், சம்பத், ஏஐடியுசி சார்பில் செயலாளர் சேகர், மூர்த்தி, ஐஎன்டியுசி செயலாளர் சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: நலவாரிய முத்தரப்புக் கமிட்டியைப் புதுப் பிக்க வேண்டும். இதில் சிஐடியு அமைப்பிற்கு பிரதிநி தித்துவம் வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி, நிலுவையுடன் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப் பாதுகாப்பு,  இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகத்தில் மிகக் குறைந்த நலவாரிய உதவிகள் வழங்கப்படுகின்றன. கல்வி, திருமணம், தீபாவளி போனஸ், இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், உபகரணங்கள் வாங்க மானியம், பிரசவ நிதி, வீடற் றோருக்கு இலவச வீடு போன்ற திட்டங்களையும், பணப் பயன்களையும் வழங்க வேண்டும். மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பை கைவிட மாநில அரசு வலியுறுத்த வேண்டும். நலவாரிய நிதியை அம்மா  உணவகத்துக்கு பயன்படுத்தாமல், தனி நிதி ஒதுக்கி அம்மா உணவகத்தைச் செயல்படுத்த வேண்டும். காலியாக உள்ள திருப்பூர் மாவட்ட நலவாரிய அலுவல கத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் நியமனம் செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.