tamilnadu

img

தருமபுரியில் தகுதித்தேர்வுக்கான பயிற்சி

தருமபுரி, அக்.12- தருமபுரி  அரசு கலைக் கல்லூரியில் தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. தருமபுரி  அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் சார்பில் தேசிய மற்றும் மாநில அளவி லான தகுதித் தேர்வுக்கான ( நெட்/ செட்) ஒரு நாள்  பயிற்சி பட்டறை அண்ணா நூற்றாண்டு கலைய ரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) ஜா. பாக்கியமணி தலைமை வகித்தார். ஆங்கில துறை  தலைவரும், பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளரு மான முனைவர் அ.தேன்மொழி வரவேற்றார். திருச்சி நேஷனல் கல்லூரி ஆங்கில துறை  இணைப் பேராசிரியர் முனைவர் பெனட், பாண்டிச்சேரி பல்கலைகழகம் ஆங்கில துறை  பேராசிரியர் முனைவர் டி.மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு  தேசிய மற்றும் மாநில அலவிலான  தகுதித் தேர்வினைப் பற்றி (நெட்/ செட்) சிறப்பான கருத்துக்களையும், தகுதிதேர்வை எப்படி எதிர் கொள்வது குறித்த நுணுக்கங்களையும், எளிமை யாக வெற்றி பெறுவது குறித்து எடுத்துரைத்தனர். இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும்  சான்றிதழ் வழங்கப்பட்டது. இப் பயிற்சிக்கான  ஏற்பாடுகளையும் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் அ.தேன்மொழி, மேலும் இப்பயிற்சி பட்டறையில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்கள்  சத்யா, முனைவர் குமார் ஆகி யோர் செய்திருந்தனர்.  சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, பருகூர், நாமக்கல், வடசென்னிமலை, ஆத்தூர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களும்,  மாணவ, மாணவிகள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.