tamilnadu

img

டாப்சிலிப்பில் யானைகள் புத்துணர்வு முகாம் - 48 நாட்களுக்கு யானை சவாரி ரத்து வனத்துறை அறிவிப்பு

 பொள்ளாச்சி, பிப்.7- பொள்ளாச்சியை அடுத்த டாப்சி லிபில் 27 வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம் வியாழ னன்று தொடங்கப்பட்டது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்ப கம் சார்பில் டாப்சிலிபில் உள்ள கோழி கமுத்தி மற்றும் வரகளியாறில் 27 வளர்ப்பு யானைகள் வனத்துறையின ரால் பராமரிக்கபட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோ றும் கோவில் யானைகளுக்கு சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தபடுவதை போல் வனத்துறை சார்பில் வளர்க்கப் படும் யானைகளும் சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தபடுகிறது.  இந்நிலையில், இந்தாண்டுக்கான புத்துணர்வு முகாம் மார்ச் 24 ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெறவுள் ளது. இந்த முகாமை வால்பாறை சட்ட பேரவை உறுப்பினர் கஸ்தூரிவாசு தொடங்கி வைத்தார். இதில் ஆனை மலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் மாரிமுத்து மற்றும் பொள் ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் உடனி ருந்தனர். மேலும், 48 நாட்களுக்கு வளர்ப்பு யானைகள் அனைத்தும் முகாமில் பங்கேற்க உள்ளதால் டாப்சிலிப்பில் யானை சவாரி ரத்து செய்யபட்டுள்ள தாகவும், சுற்றுலா பயணிகள் வனத் துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக னத்தில் யானை முகாமிற்கு சென்று பார்வையிட அனுமதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.